நவராத்திரி பூஜைக்காலம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 'நவ' எனில் 'புதுமையான' என்றும் பொருள் உண்டு. ஆக, இந்த 9 நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் பூஜைகளினால் நமக்குப் புதுமையான புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தினமும் ஒரு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அன்னை, தினம் தினம் விதமான சுண்டல்கள் என உடலுக்கும் மனதிற்கும் நிஜமாகவே புத்துணர்ச்சி கிடைக்கும்.
↧